×

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

போளூர், நவ.14:  போளூர் அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், விவசாயி. இவரது மகள் ஜோதிகா(20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரது மகன் முத்து(25) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக  அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து ஜோதிகா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி உள்ளார்.  

இந்நிலையில், உறவினர் திருமணத்துக்காக கடந்த 9ம் தேதி ஜோதிகா தனது வீட்டிற்கு  வந்தார். பின்னர், திருமண நிகழ்ச்சிகள் முடிந்து அவர் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது மகளை வேலைக்கு செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்திய சிவக்குமார், கணவன்- மனைவி பிரிந்து வாழ்வது வருத்தமளிக்கிறது எனக்கூறி, மகளை அழைத்து கொண்டு முத்து வீட்டிற்கு சென்று விட்டு வந்தார். அங்கு 2 தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்த ஜோதிகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால் ஆரணி ஆர்டிஓ மைதிலி விசாரணை செய்து வருகிறார்.

Tags : suicide ,investigation ,RTO ,
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்