×

விஜயநாராயணம் அருகே கணவருடன் சேர்ந்து வாழ மகள் மறுத்ததால் தந்தை தற்கொலை

நாங்குநேரி,  நவ. 14: விஜயநாராயணம்  அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங், விவசாயி. இவரது 2வது மகளுக்கும், அருேக உள்ள கிராமத்ைத சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள்  உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டாக கணவரை  பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் ஜெயசிங் மகள் பெற்றோர் வீட்டில் வசித்து  வருகிறார். இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி  தம்பதியை சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால் அவர் கணவருடன் சேர்ந்த  வாழ மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது மகள், கணவருடன் சேர்ந்த வாழ  மறுத்து விட்டதால் அவரது எதிர்காலத்தை எண்ணி தந்தை ஜெயசிங் மனமுடைந்து  காணப்பட்டார். இந்நிலையில் ஜெயசிங், கடந்த 11ம் தேதி இரவு வீட்டின்  பின்பக்கம் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனால்  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு நாங்குநேரி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே  இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மகன் அளித்த  புகாரின்பேரில் விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகிறார்.



Tags : suicide ,Vijayanarayana ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை