×

பள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மாணவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாணவி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் 17 வயது கல்லூரி மாணவன், மாணவியை காதலித்து வந்ததும், இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் புதுச்சேரி, திருவண்ணாமலை, பெங்களூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு இருவரும் பணம் செலவு ஆனதால், வேறு வழியின்றி சென்னைக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது இருவரும் தனிமையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 17 வயது கல்லூரி மாணவன் மீது போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பள்ளி மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : College student ,Pokoso ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது