×

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி, பி.கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). இவர் நேற்று முன்தினம் இரவு 2 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, சதீஷ்குமாரின் தலை, கை, கால்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சதீஷ்குமாருக்கும், ஓட்டேரி மற்றும் எம்கேபி நகரை சேர்ந்த அஜய் புத்தா (22), அஜித் (22) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவரை தீர்த்துக் கட்ட 2 பேர் கும்பல் முயற்சித்திருப்பது தெரியவந்தது. சதீஷ்குமாரை வெட்டிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது