×

திருவில்லிபுத்தூரில் குடிநீர் கேட்டு குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்

திருவில்லிபுத்தூர், நவ. 13: திருவில்லிபுத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே மருத்துவர் காலனி உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என கூறப்படுகிறது. தொடர் மழை பெய்தும் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து நேற்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். காலிக்குடங்களை கைகளில் உயர்த்தபடியே பொதுமக்கள் குடிநீர் விநியோகம் கேட்டு கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.

Tags : Civilians ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...