×

கிருஷ்ணகிரியில் பாமக பொதுக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரியில், பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட மத்திய மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.  இதில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. உள்ளாட்சியில் போட்டியிட கூடுதலான இடங்களையும், உரிமைகளை கேட்டு பெறுவோம். பாமக  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில், பாமகவினர் கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டால், எந்த பொறுப்பில் இருந்தாலும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பாமக மாநில துணை தலைவர் மேகநாதன், துணை அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், மாநில துணை தலைவர் வெங்கடேச செட்டியார், இளைஞர் சங்க மாநில துணை தலைவர் பழனிவேல், இளம்பெண்கள் அணி மாநில துணை செயலாளர் பாரதி, மகளிர் அணி மாநில துணை செயலாளர் காமாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்ராசன், நிர்வாகிகள் தமிழ்சங்கர், மாதேஸ்வரி, ஜீவா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பூபதி நன்றி கூறினார்.

Tags : Bamaka General Committee Meeting ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்