×

நாகை மாவட்டத்தில் மாநில கேரம் போட்டிக்கு 24 மாணவர்கள் தேர்வு



மயிலாடுதுறை, நவ.13: மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க நாகையில் நடந்த போட்டியில் 24 பேர் தேர்வு பெற்றனர்.நாகை மாவட்ட அளவிலான கேரம் போர்டு போட்டி மயிலாடுதுறை தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயது, 17 வயது 19 வயது கொண்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர் . நாகை மாவட்டத்திலிருந்து 50 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்குபெற்றனர்.இதில் ஆண்கள் பிரிவில் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, நீடூர் நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளி, பழைய கூடலூர் கல்யாணசுந்தரர் அறக்கட்டளை பள்ளி, மாடர்ன் மெட்ரிக் பள்ளி நாகூர். மேலும் பெண்கள் பிரிவில் ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழைய கூடலூர் குருஞான சம்பந்தர் ஆகிய பள்ளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும் மாநில அளவில் நடைபெறும் கேரம் போட்டியில் பங்கு பெற உள்ளனர். கடந்த 2 நாட்களாக நடந்த இப்போட்டியை உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணகுமார் மற்றும் பிரபாகரன் முன்னின்று நடத்தினர்.


Tags : State Carrom Competition ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...