×

மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு

மயிலாடுதுறை, நவ.13: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டிஎஸ்பி முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்திற்கு மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பாலையூர், பெரம்பூர், செம்பனார்கோயில், பாகசாலை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மயிலாடுதுறை, போக்குவரத்து காவல் பிரிவு ஆகியவை காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பழைய காலத்திலிருந்தே இந்த முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் டிஎஸ்பி அலுவலகங்கள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக காவல்துறை வீடு கட்டுமான கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறையில் புதிய டிஎஸ்பி அலுவலகம் கட்டுவதற்கான அளவீட்டை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு துவங்கப்படும் என்று தெரிகிறது.

Tags : building ,DSP ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...