×

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

காளையார்கோவில், நவ. 13:  காளையார்கோவிலில் இருந்து தண்டிக்கண்மாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  காளையார்கோவில் ஒன்றியம் குறுந்தனி ரோடு வழியாக தண்டிக்கண்மாய் செல்லும் வி்லக்கில் உயரழுத்த மின் கம்பிகளை கொண்ட மின் கம்பம் பாதியாக உடைந்து அபாயகரமாக உள்ளது. மேலும் அந்த வழியாக தண்டிக்கண்மாய், செவக்கண்மாய், வளையம்பட்டி போன்ற கிராமங்களுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்கின்றனர். மின் கம்பம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. இதனால் மின் கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுபற்றி சமூக ஆர்வலர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட மின்கம்பம் தற்போது சேதமடைந்துள்ளது. பெரிய அசம்பாவிதத்தை தவிர்க்க மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்