×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பேரிடர் மேலாண்மை ஒத்திகை

ஆர்.எஸ்.மங்கலம், நவ.13: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் மருத்துவமனையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள சோழந்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடந்தது. நிலைய அலுவலர் அருளானந்தம் தலைமை தாங்கினார். இதில் பேரிடர் காலங்களில் ஆபத்தான விளைவுகளை எவ்வாறு கையாள்வது விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் துறை குழுவினரின் சார்பாக ஒத்திகை நடத்தி காண்பித்தனர். இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை