×

மொபட் விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

செய்யாறு, நவ.13: செய்யாறு அடுத்த கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(62). மாற்றுத்திறனாளியான இவர் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி செய்யாறு மார்க்கெட் கமிட்டிற்கு வந்த அவர், வேர்க்கடலை விற்பனை செய்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பினார்.
செய்யாற்றைவென்றான் பாப்பாத்தியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென மொபட்டின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய மனோகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மனோகரன் உயிரிழந்தார். இதுகுறித்து  அவரது மகன் ஏழுமலை அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : accident victim ,
× RELATED விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அரசு...