×

சென்னை சைபர் செல் பிரிவு எஸ்பி திருவண்ணாமலை எஸ்பியாக கூடுதல் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை, நவ.13: சென்னை சைபர் செல் சிபிசிஐடி பிரிவு எஸ்பி பி.சாமுண்டீஸ்வரி திருவண்ணாமலை எஸ்பியாக கூடுதல் பொறுப்பேற்று கொண்டார். திருவண்ணாமலை எஸ்பி எம்.ஆர் சிபிசக்கரவர்த்தி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சி கழகத்தில் நடைபெறும் பயிற்சிக்கு சென்றுள்ளார். இந்த பயிற்சி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை சைபர் செல், சிபிசிஐடி பிரிவின் எஸ்பியாக பணிபுரிந்து வரும் பி.சாமுண்டீஸ்வரி, திருவண்ணாமலை எஸ்பியாக கூடுதல் பொறுப்பேற்க காவல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, எஸ்பி சாமுண்டீஸ்வரி திருவண்ணாமலை எஸ்பியாக கூடுதல் பொறுப்ைப நேற்று ஏற்றுக் கொண்டார். அவரை ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tags : Thiruvannamalai SP ,Chennai Cyber Cell Division ,
× RELATED வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்...