×

கல்லிடைக்குறிச்சியில் ரூ.1 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி

அம்பை, நவ. 13:  கல்லிடைக்குறிச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை முருகையா பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. முருகையாபாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். செயல் அலுவலர் சுலைமான் சேட் முன்னிலை வகித்தார். பணி மேற்பார்வையாளர் சேதுராமலிங்கம் வரவேற்றார். விழாவில்  ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் 2019-20ன் கீழ் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் ரத வீதி,

தெற்கு கரம்பை ரத வீதி மற்றும் தெருக்கள், லெட்சுமி புரம் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி, மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் சங்கரநாராயணன், மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, அம்பை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, சுகாதார ஆய்வாளர் கந்தசாமி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : tar road ,Kallidaikurichi ,
× RELATED விஷம் குடித்த காவலாளி சாவு