×

ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசு உதவித்தொகை பெற அழைப்பு

திருவாரூர், நவ. 12: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இத்திட்டத்தில் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள், மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் காணலாம். மேலும் விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்பதுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று பெயர் குறிப்பிடப்பபட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமகால் பாரம்பரியக் கட்டிடம் முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5 -என்ற முகவரிக்கு வரும் 30ம்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags : pilgrimage ,Jerusalem ,
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...