×

வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் சனிபிரதோஷ வழிபாடு

வேதாரண்யம், நவ.12: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்கோயிலில் சனிப் பிரதோஷ விழாவைமுன்னிட்டுசுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும், சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேசுவரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அந்தச் சமயம் வேதாரண்யம் விளக்கழகு என்ற பெயருக்கேற்ப சுவாமி சன்னதியிலுள்ள சரவிளக்கு ஏற்றப்பட்டுஒளிமயமாக காட்சியளித்தது. பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். பின்பு வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதேபோல் நாலுவேதபதி அமராபதி ஈஸ்வரர்கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில்,வடமறைக்காடர் கோவில்,தேத்தாகுடிதெற்குஅழகியநாதர்கோயில்,கோடியக்காடுகுழகர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர்கோவில், புஷ்பவனம் சுகந்தவனேஸ்வரர்கோவில், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரர்முடையார் கோவில், அகரம் அழகியநாதர் சுவாமிகோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்திரிப்புலம் கோவில், குத்தகைகாசிநாதர் சுவாமிகோவில்,ஆறுகாட்டுத்துறை ஆறுகாட்டீஸ்வரர் கோவில், தென்னம்புலம் அக்னீஸ்வரர்கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சனிபிரதோஷவிழா வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Tags : area ,Vedaranyam ,Shiva ,temples ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...