×

4 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில், கொலை வழக்கில் தொடர்புடைய கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்பன்ராஜ் (எ) அப்பன் (35), தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மாங்காடு மங்களபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (எ) பல்லு விக்கி (22), செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த புழல் காவாங்கரையை சேர்ந்த பிரேம்குமார் (25), ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எண்ணூர் தள்ளாங்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (22) ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...