×

சிவகிரியில் வாகனம் மோதி வாலிபர் பலி

புளியங்குடி, நவ.7:சிவகிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார். சிவகிரி இல்லம்பிள்ளை தெற்குத்தெருவை சேர்ந்த நீராதுலிங்கம் மகன் ரமேஷ் (24). இவர், கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நண்பர் திருமணத்திற்காக ஊருக்கு வந்த ரமேஷ், நேற்று முன்தினம் இரவு  9  மணியளவில் உணவு வாங்குவதற்காக சொக்கநாதன் புதூர் அருகே உள்ள கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : collision ,Sivagiri ,
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!!