×

புதூர் தவணையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

செங்கோட்டை, நவ. 7:  செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட தவணை பகுதியில்,  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது.  இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். விழாவிற்கு  செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, செங்கோட்டை  நகர திமுக செயலாளர் ரஹீம், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பரமசிவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி கடாபி, டாக்டர் நவாஸ்கான், புதூர் பேரூர் செயலாளர் கோபால், சீதாராமன், செல்வி, முருகன், நல்லையா, செண்பகம், குத்தாலிங்கம், இளைஞரணி இசக்கிதுரை, சந்தோஷ், கற்குடி, சுரேஷ், கதிரவன் காலனி ரமேஷ், ராமர், குமார், புதூர் முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Travelers ,Photo Gallery ,Pudur ,
× RELATED தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர்...