×

ஒருவருக்கு பதவி உயர்வு நெல்லை மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் மாற்றம்

நெல்லை, நவ.7: நெல்லை மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஷில்பா பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் 19 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு: நெல்லை கலால் அலுவலக மேலாளா் இந்திராகாந்தி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலக கல்வி உதவிதொகை தனி தாசில்தாராகவும், திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம், நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த கணேசன், நெல்லை முத்திரைபிரிவு தனி தாசில்தாராகவும், முத்திரை பிரிவு பணியிலிருந்த பார்கவி தங்கம் சேரன்மகாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த வெங்கட்ராமன் அம்பை குடிமைபொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர் இருதயராஜ் நெல்லை துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், இந்த பதவியிலிருந்த ராஜு சங்கரன்கோவில் ஆதி திராவிடர் நல தனி தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த செல்வநாயகம், புளியங்குடி நகர நிலவரி திட்ட அலகு 1 தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த ஆதிநாராயணன் ராதாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், இதே பதவியிலிருந்த ராஜசேகரன் நெல்லை டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளராகவும், இந்த பதவியிலிருந்த முகமதுயூசுப், சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். வீகேபுதூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதி சங்கரநாராயணன், செங்கோட்டை குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த ஹென்றி பீட்டர், தென்காசி புதிய மாவட்ட உருவாக்க தனி அலுவலர் அலுவலக தாசில்தாராகவும், சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பட்டமுத்து, திசையன்விளை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை பிற்பட்டோா் நல அலுவலக தனி தாசில்தார் பிரின்சிலின் அருள்செல்வி நாங்குநேரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், இந்த பதவியிலிருந்த சுப்புராயலு ஆச்சாரி நெல்லை டாஸ்மாக் சில்லரை விற்பனை உதவி மேலாளராகவும், இந்த பதவியிலிருந்த பத்மநாபன் நெல்லை பிற்பட்டோர் நல அலுவலக தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அம்பை குடிமைபொருள் வழங்கல் தனி தாசில்தார் செலின் கலைச்செல்வி, பாளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் இந்த பதவியிலிருந்த லதா சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பத்மாசெல்வகுமாரி பதவி உயர்வு பெற்று நெல்லை கலால் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நக்கீரன், வீரமணி, மைதீன் பாட்ஷா, தமிழ் செல்வி, சிவன் பெருமாள், கருப்பசாமி, வில்லுடையார், சங்கரநாராயணன், மீனா, ராஜதுரை, ரத்னா பிரபா ஆகிய 11 வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Tags : Tasildars ,Paddy District ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து...