×

தென்காசி தனி மாவட்ட பணி அரசு விரைவுபடுத்த வேண்டும் தமுமுக, மமக வலியுறுத்தல்

தென்காசி, நவ. 7: தென்காசி தனி மாவட்ட பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டுமென தமுமுக, மமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக மற்றும் மமக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப் தலைமை வகித்தார். மமக மாவட்ட செயலாளர் பஷீர்ஒலி வரவேற்றார். மாவட்ட தமுமுக செயலாளர் அகமதுஷா தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் பிலால் இறைவணக்கம் பாடினார். தமுமுக மற்றும் மமக மாநில தலைவர்  ஜவாஹிருல்லா, மாநில செயலாளர் மைதீன்சேட்கான் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் அப்துர்ரகுமான், செய்யது அலி, மஜீத், திவான், அப்துல்காதர், பாசித், நகர நிர்வாகிகள் நல்லவர்சேட், ஜாபர்உசேன், களஞ்சியம்பீர், நியாஸ், அஜீஸ், சேகனா, வாப்பாசேட், பிரேம்அலி, மைதீன், மாஸ் காஜா, அலி, சவுகத், நஜீப், ரபீக், ஷாஜகான், அப்துல்ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தென்காசி தனிமாவட்ட பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். தென்காசி தனி மாவட்டத்திற்காக மாவட்ட அர அலுவலகங்களுக்கு இலத்தூர் விளைநிலங்களை எடுக்காமல் நகர எல்லைக்குள்ளேயே அனைத்து துறை அலுவலகங்களையும் அமைக்க வேண்டும். தென்காசி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Government ,Tenkasi Separate District ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...