×

களக்காட்டில் எஸ்ஐயை தாக்கியதாக தொழிலாளி மீது வழக்கு

களக்காடு, நவ. 7: களக்காடு  அருகே உள்ள தம்பிதோப்பு இந்திரா காலனியைச் சேர்ந்த வானுமாமலை மகன்  சிதம்பரநாதன் (45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 4ம் தேதி இரவு களக்காடு -  சேரன்மகாதேவி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், களக்காடு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்  ஜார்ஜ் பிரேம் லால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கம்பால் தொழிலாளி சிதம்பரநாதனை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடிச்சென்று  சப்-இன்ஸ்பெக்டரை பிடித்து அவர் தாக்குவதை தடுத்தனர். காயமடைந்த  சிதம்பரநாதன், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்.

இதனிடையே பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம் லால்,  சிதம்பரநாதன் மது போதையில் சாலையில் செல்வோரை வழிமறித்து அவதூறாக  பேசியதாகவும், அதனை தட்டிக் கேட்டதால் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து,  அவதூறாக பேசி, கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக களக்காடு போலீசில்  புகார் செய்தார். இதையடுத்து சிதம்பரநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalakkad ,
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு