×

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு துவக்கம்

தஞ்சை, நவ. 7: தஞ்சை சரகத்துக்கு உட்பட்ட 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று ஆயுதப்படை மைதானத்தில் துவங்கியது.காவல்துறையில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்தது. இதில் தஞ்சை சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள 1168 ஆண்களும், 586 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு தஞ்சையில் துவங்கியது.இதில் முதல் நாளான நேற்று 518 ஆண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உடற்பரிசோதனை, ஓட்டப்போட்டிகள் நடந்தது. வரும் 12ம் தேதி வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. 6, 7ம் தேதிகளில் ஆண்களுக்கு உயரம், மார்பளவு சரிபார்த்தல், 1500 மீட்டர் ஓட்டம், 8ம் தேதி பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. பின்னர் குண்டு எறிதல், கயிறு ஏறும் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இந்த தேர்வை மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ மேற்பார்வையிட்டார். இதில் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், எஸ்பி.மகேஸ்வரன் கலந்து கொண்டனர்.

Tags : Policemen ,Tanjore Armed Forces ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்