×

கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

கெங்கவல்லி, நவ.7: கெங்கவல்லி அருகே 95.பேளூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது பசு மாடு அருகிலிருந்த விவசாய தோட்டத்தில், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை பார்த்த கிணற்றின் உரிமையாளர் ஆறுமுகம், உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான வீரர்கள், கயிறு கட்டி கீழே இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags : Recovery ,well ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...