×

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர், நவ. 7: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவி தொகைபெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து அந்த பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த செப்டம்பர் 30ம் தேதிய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் வரும் 29ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்டவேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான திட்ட பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்