×

கெங்கவல்லி அருகே தொழிலாளி தற்கொலை

கெங்கவல்லி, நவ.7: கெங்கவல்லி அருகே தெடாவூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(60). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் இருப்பதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், குடிபோதையில் வந்த சுப்பிரமணியை, அவரது மனைவி அமுதா திட்டியுள்ளார். இதில், மனமுடைந்த சுப்பிரமணி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி, தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Kengavalli ,
× RELATED ஏரியில் தீ விபத்து