×

பாடாலூர் அருகே கன்று குட்டியுடன் பசு மாடுகள் திருட்டு

பாடாலூர், நவ.7: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே 2 பசு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள சில்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ராஜ்குமார் விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்த போது கொட்டகையில் கட்டியிருந்த 2 பசு மாடு, ஒரு கன்று குட்டி இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ ஓட்டிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது.



Tags : Theft ,Badalur ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது