×

தினக்கூலியாக ரூ.380 வழங்க கோரி மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 6வது நாளாக நீடிப்பு


பெரம்பலூர், நவ.7:தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் 6 வது நாளாக நேற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினக் கூலியாக ரூ380 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி பெர ம்பலூரில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்கள் கடந்த 1ம்தேதி முதல் தொடர் வேலைநிறு த்தப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் ஒருகட்டமாக 4ரோடு அரு கேயுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 5ம்தேதி சங்கத்தின் தலைவர் கனகராஜ் தலை மையில் முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டம் செய்ததோடு, மேற்பார்வைப் பொறியா ளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (6ம்தேதி) 6வதுநா ளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் 150 பேர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் மணி, பொரு ளாளர் அரவிந்த், மாநில செயற்குழு உறுப்பினர் திலகர் உள்ளிட்ட 150பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், மின்சார வாரியத் தில் மேற்கொள்ளப்படும் மின்கம்பங்கள் நடும்பணி, குழிகள் தோண்டும்பணி, உயரழுத்த மின் கம்பி பராமரிப்புப் பணிகள், மின் தடை பழுது உள்ளிட்ட பணி களில் தொய்வு ஏற்பட்டுள் ளது.இன்று திருச்சியில்...இதன் அடுத்த கட்டமாக திருச்சியிலுள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட் டை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டத்தினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் இன்று (7ம்தேதி) நடத்தப் பட உள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.



Tags : Strike strike ,power workers ,
× RELATED லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன...