×

உள்ளாட்சி தேர்தலுக்காக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூமாலை வணிக வளாக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

கரூர், நவ.7: உள்ளாட்சித் தேர்தலுக்காக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டார்.கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பயன்படுத்துவதற்ககாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து 1912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 980 கட்டுபபாட்டு கருவிகள் கரூர் மாவட்டம் வந்துள்ளது. இந்த கருவிகள் தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல்நிலை பரிசோதனை செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் பார்வையிட்டார்.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கரூர், குளித்தலை இரண்டுநகாட்சிகள், 11பேரூராட்சிகள், 8ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 2நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96,419 ஆண்கள், 1,04,503பெண்கள், இதரர்4பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

பேரூராட்சிகளில் 61,842 ஆண்கள், 65,960 பெண்கள், இதரர் ஒருவரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2,60,091 ஆண்கள், 2,73,149 பெண்கள் இதரர் 52பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஆகமொத்தம் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் 2,60,091 ஆண்கள், 2,73,149 பெண்கள் இதரர் 52பேரும் வாக்காளர்களாக உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 11பேருராட்சி, கரூர், குளித்தலை நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடிகளில் பயன்படுத்த 1,912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 980 கட்டுப்பாடடு கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளது. ஊரகப்பகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். இதற்காக 3,460 வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.இதில் கலெக்டரின்நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) செல்வராஜ், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சத்தியமூர்த்தி, கிருஷ்ணன், மஞ்சுஜெயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Tags : election ,mall ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு