×

கரூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கோரி தமிழ் அமைப்பினர் கலெக்டரிடம் மனு

கரூர், நவ.7: கரூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு கோரி தமிழ் அமைப்பினர் கலெக்டரிடம் மனுஅளித்தனர்.கரூர் திருக்குறள்பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தென்னிலை கோவிந்தன், கோவிந்தராஜ், வையாபுரி, நாகேந்திர கிருஷ்ணன், திருமூர்த்தி, சதாசிவம், குமாரசாமி உள்ளிட்டோர் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவள்ளுவருக்கு சாதி, மதம், அரசியல் சாயம்பூச அனுமதிக்கக்கூடாது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்புத்தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுஅளித்தனர்.மேலும் மேலைபழனியப்பன், திருவள்ளுவர் சிலை ஒன்றை கலெக்டரிடம் நினைவுபரிசாக வழங்கினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.


Tags : organizations ,Tamil ,Tiruvalluvar ,district ,Karur ,
× RELATED அரணாரையில் 80 வயது மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி