×

குன்னனூர் பிரிவு அருகே சிதிலமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

கரூர், நவ. 7: கரூர் திருச்சி பைபாஸ் சாலை குன்னனூர் பிரிவு அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள நிழற்குடை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் குன்னனூர் பிரிவுக்கான சாலை வசதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கரூர், வெள்ளியணை, சுக்காலியூர், மதுரை பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக குன்னனூர் பிரிவு அருகே நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது.

நிழற்குடை அமைக்கப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மழை, வெயில் மற்றும் காற்றின் காரணமாக ஆங்காங்கே சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.எனவே, இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,division ,
× RELATED போதை மாத்திரை விற்றவர் கைது