×

துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை வழங்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, நவ.7:  கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், தினம்தோறும் துப்புரவு பணியாளர்கள் காலையில் கையுறை, இல்லாமல் குப்ைப கழிவுகளை அள்ளுகின்றனர். இந்த குப்பைகளை டிராக்டர், தள்ளுவண்டிகளில் எடுத்து செல்கின்றனர். மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட குழிகளால் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. அவ்வப்போது, ஆங்காங்கே  சாக்கடை கழிவு நீரோடைகளில் அடைப்புகள் ஏற்படுகிறது. இந்த அடைப்புகளை, நகராட்சி ஊழியர்கள் தங்கள் கையால் அள்ளும் அவல நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான கையுறைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : cleaning staff ,
× RELATED சுதந்திர தினவிழாவில் தூய்மை...