×

தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

திட்டக்குடி, நவ. 7: விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடிக்கு வரும் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் வந்தபோது ஒரு நபர் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ் நடத்துனர் காமராஜ் அந்த நபரிடம் டிக்கெட் கேட்டார். ஆனால் அவர் டிக்கெட் வாங்காமல் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்தார். இதையடுத்து நடத்துனரின் வற்புறுத்தலின்பேரில் அந்த நபர் டிக்கெட் பெற்றார். அப்போது பேருந்து பெண்ணாடம், ஆவினங்குடி வழியாக திட்டக்குடி பேருந்து நிலையம் வந்து நின்றது. அப்போது பஸ்சில் வந்த வாலிபர் பேருந்தில் இருந்த கட்டையை எடுத்து திடீரென பேருந்தின் முன்புற கண்ணாடியை அடித்து உடைத்தார். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அந்த நபரை பிடித்து திட்டக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திட்டக்குடி அடுத்துள்ள இளமங்கலத்தை சேர்ந்த தமிழரசன் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து திட்டக்குடி போலீசார் அவரது  உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.


Tags : bus glass break ,
× RELATED பைக் மீது பஸ் மோதல்; கம்பெனி ஊழியர் பலி: பஸ் கண்ணாடி உடைப்பு ,..சாலை மறியல்