×

மேம்பாலப் பணிக்காக நாளை மின்விநியோகம் நிறுத்தம்

மதுரை, நவ. 7: மதுரை கோ.புதூர் துணைமின்நிலையத்தின், வானொலி நிலைய பீடருக்கு உட்பட்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நாளை (நவ.8) நடைபெற
உள்ளது.இதையொட்டி கோகுலே ரோட்டின் ஒரு பகுதி, பழைய அக்ரஹார தெரு, சப்பாணி கோயில் தெரு, லஜபதிராய் ரோடு, ராமமூர்த்தி ரோடு, பூமா மருத்துவமனை அருகில், எல்.டி.சி. ேராட்டின் ஒரு பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (நவ.8) காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்