×

இரண்டாம் நிலை காவலருக்கு உடல் தகுதி தேர்வு துவங்கியது

திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு துவங்கியது.திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி, திறன் தேர்வு சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முதல் துவங்கி நாளை (3 நாட்கள்) வரை நடைபெறுகிறது.இதில் இரண்டு மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 2551 பேர் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் துவங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மேற்பார்வையில் முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1036 ஆண்கள் பங்கேற்றனர். உயரம், மார்பு அளவீடு மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 2வது நாளான இன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த 835 ஆண்களுக்கு உயரம், மார்பு அளவீடு மற்றும் ஆயிரத்து 500 ஓட்டம் நடைபெற உள்ளது. 3வது நாளான நாளை திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 680 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : guard ,
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...