×

நீலகிரியில் பொது இடங்களில் மதுபாட்டில் வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

ஊட்டி,  நவ.7: நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை பொது இடங்கள்,  சாைலயோரங்களில் தூக்கி எறிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என  மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் சூழலியல்  முக்கியத்துவம் பகுதியாக விளங்கி வருகிறது.  வனப்பரப்பு மிகுந்த  இம்மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யாைன, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான  வன விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. இதுதவிர அரியவகை மரங்களும், செடி  கொடிகளும் உள்ளன. நீலகிரியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழலை  பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்  அளிக்கும் நோக்கில் பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்ப தடை  விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக்  கடைகளில் மது வாங்கி அருந்த கூடிய குடிமகன்கள், அவற்றை குடித்துவிட்டு  காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் போன்ற  வற்றில் வீசி எறித்து சென்று விடுகின்றனர்.

குறிப்பாக மசினகுடி,  கூடலூர் சுற்று வட்டார பகுதிகள், கெத்தை மலைப்பாதை உள்ளிட்ட  வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று மது அருந்த கூடியவர்கள் காலி  பாட்டில்களை வனப்பகுதிக்குள்ளேயே வீசி விடுகின்றனர். மேலும், சில  சமயங்களில் அவற்றை பாறைகளில் வீசி உடைத்து விடுகின்றன. இதனால் யானை,  காட்டுமாடு, புலி உள்ளிட்டவைகள் காயமடைந்து இறக்கக்கூடிய சூழலும் உள்ளது. இதனை  கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மது  பாட்டில்களை சாலையோரங்கள், பொது இடங்களில் வீசி எறியக்கூடாது என்றும், தவறும்  பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி  மாவட்டத்தில் 55 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இடவசதி உள்ள 32 மதுபான  கடைகளில் மது அருந்தும்  கூடத்திற்கு கடந்த அக்டோபர் 1ம் ேததி முதல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மது குடித்துவிட்டு காலி  பாட்டில்களை குப்பை தொட்டிகளில் போடாமல் பொது இடத்திலோ, பொதுமக்கள் கூடும்  இடங்களிலோ, சாலையோரங்களிலோ தூக்கி எரியப்படுவது கண்டறியப்பட்டால் உள்ளாட்சி  அமைப்புகளில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ரூ.10 ஆயிரம் அபராதம்  விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  தெரிவித்துள்ளார்.

Tags : places ,Nilgiris ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...