×

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் 71 மனுக்கள் பெறப்பட்டன


கோவை, நவ. 7: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமியிடம் 71 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோர்ந்த பொதுமக்கள் 71 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனுக்களை அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட துணை கமிஷனர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், உதவி கமிஷனர் (வருவாய்) அண்ணாதுரை, நகர்நல அலுவலா–் சந்தோஷ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு