×

திருவாரூரில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர், நவ.7: திருவாரூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நாளை (8ம்தேதி) நடைபெறுகிறது. திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் அருணாசலம் தலைமை வைக்கிறார். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்பி கோபால் முன்னிலை வகிக்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் நூறு சதவிகித வெற்றியை பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,activists ,Thiruvarur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...