×

கிணற்றில் விழுந்த மூதாட்டி 2 நாட்களுக்கு பின் மீட்பு

கெங்கவல்லி, நவ.6:கெங்கவல்லி தாலுகா கூடமலை ஊராட்சியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(60). இவர் சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இவரை காணவில்லை. வள்ளியம்மாளை உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கூடமலை மாரியம்மன் கோயில் அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் வள்ளியம்மாள் இருப்பதாக நேற்று மாலை கிணற்றின் அருகில் மாடு மேய்த்தவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த கெங்கவல்லி நிலைய தீயணைப்பு அலுவலர் பெரியசாமி தலைமையிலான வீரர்கள் வள்ளியம்மாள் உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறு காயங்களுடன் வள்ளிம்மாள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Recovery ,well ,
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...