×

தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் கைது

ஆத்தூர், நவ.6: ஆத்தூர் கோட்டை சிவன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(48). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 16, 18 வயதுடைய சகோதரர்கள் இருவர் ஆறுமுகத்தை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து, போதையில் இருந்த அவர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார், ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுவர்களை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : boys ,
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்