×

தற்கொலைக்கு முயன்ற

தேன்கனிக்கோட்டை, நவ.6: தேன்கனிக்கோட்டையில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் காதலனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (26).  திருப்பூர் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். இவரும் கிருஷ்ணகிரியில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வரும் அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (28) என்பவரும் காதலித்துள்ளனர். இதனால் இருவரும் பல்வேறு இடத்திற்கு சென்று சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் நதியா, கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு கண்ணன் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த நதியா பணியில் இருந்து விடுமுறை எடுத்து கொண்டு சொந்த ஊரான அஞ்செட்டிக்கு வந்துள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, எறும்பு சாக்பீசை பொடியாக்கி சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் டிஎஸ்பி சங்கீதா மற்றும் அஞ்செட்டி போலீசார் நதியா, கண்ணன் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காதலனிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை