×

பழைய தர்மபுரியில் உயிர்பலிக்கு காத்திருக்கும் திறந்த வெளி கிணறு

தர்மபுரி, நவ.6: பழைய தர்மபுரியில் திறந்த வெளியில் காணப்படும் பொது கிணற்றுக்கு இரும்பு கேட் அமைக்க ேவண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியில், பொதுமக்களின் தேவைக்காக ஒரு பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட வறட்சி காரணமாக, கிணறு வறண்டு போனது. இதையடுத்து பொதுமக்களும் கிணற்றை பயன்படுத்தாமல், தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கிணற்றுக்குள் கொட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த கிணறு கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இதையடுத்து கிணற்றில் சுமார் 50அடிக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தரை மட்டத்தில் இருந்து 10 அடியில் தொட்டுவிடும் அளவிற்கு உள்ளதால், அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. என சின்னதோப்பில் உள்ள பொது கிணற்றிற்கு, கம்பிவலை போட்டு மூடி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Old Dharmapuri ,
× RELATED தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி