×

மதகடிப்பட்டில் வாகன சோதனை மோட்டார் பைக் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்

திருபுவனை, நவ. 6:  மதகடிப்பட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, மோட்டார் பைக் திருடி வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருபுவனை சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதகடிப்பட்டு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி 2 மோட்டார் பைக்கில் தனித்தனியாக வந்த 2 பேரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே இருவரையும் திருபுவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் பக்கமேடு குளத்துமேட்டு தெருவை சேர்ந்த மணி என்ற மணிவண்ணன்(32), காணை சின்னதெருவை சேர்ந்த ராஜ் என்கிற ஆனந்தராஜ் (25) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் பைக் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன், ஆனந்தராஜ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : youths ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை