×

ஆழ்வார்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை

கடையம், நவ. 6:  ஆழ்வார்குறிச்சி அடுத்த செட்டிகுளத்தை சேர்ந்தவர்  அந்தோணி பாஸ்கர் மகள் கிறிஷ்டி (24) . இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டில் பீடி சுற்றி வந்தார். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்ததை தவிர்த்து வந்தார்.  இதில் மனமுடைந்த கிறிஷ்டி நேற்று முன்தினம் மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Adivargurichi ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை