×

லாரி மோதி தந்தை, மகன் படுகாயம்

சாத்தான்குளம், நவ. 6: சாத்தான்குளம் அருகே டாரஸ் லாரி மோதியதில் பைக்கில் சென்ற தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.  சாத்தான்குளம் அருகே  கூவைகிணறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் அந்தோணிமுத்து (43) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மனைவி விஜயராணி, மகன் ரவிக்குமார் (6) ஆகியோருடன் அமுதுண்ணாகுடி சென்றுவிட்டு ஊருக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். நெடுங்குளம்-கொம்மன்குளம் விலக்கில் சாஸ்தா கோயில்  அருகே சென்றபோது அதிவேகமாக வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்தோணிமுத்து, ரவிக்குமார்  படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட இருவரும் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சாத்தான்குளம் எஸ்.ஐ. சத்தியபாமா, டாரஸ் லாரி டிரைவரான பண்ணைவிளை மனோகரன் தெருவைச் சேர்ந்த டேனியலை (53) கைதுசெய்தனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி