×

பேய்க்குளம் அருகே ஆழ்துளை கிணறுகள் மூடல்

சாத்தான்குளம், நவ.6:  சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் இருந்து அருளூர் செல்லும் சாலையில் மணிமுத்தாறு கால்வாய் ஓடை அருகில் ஆழ்துளை அமைக்கப்பட்டு மூடப்படாமல் காணப்பட்டது. இதனால் சமூக ஆர்வலர்கள்  கல் வைத்து மூடி வைத்தனர். இதனால் குழந்தைகள், சிறுவர்கள் சிக்கி  உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஆழ்வார்திருநகரி பிடிஓக்கள் பாக்கியசீலி, கருப்பசாமி துரித நடவடிக்கை எடுத்து மூட நடவடிக்கை எடுத்தனர். அப்போது விஏஓ செந்தில்குமார், கிராம உதவியாளர் ஜான்சி, கருங்கடல் ஊராட்சி செயலாளர் முருகேசன் உடனிருந்தனர்.

Tags : Closure ,wells ,Baykulam ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்