×

கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யூரியா மூட்டைகள் பறிமுதல்

சிவகங்கை, நவ.6:  சிவகங்கை அருகே கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழு யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை அருகே கீழக்கண்டனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரத்தை சங்க செயலர் கடத்தி பதுக்கி வைத்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து வேளாண்மை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் குறைவாக உள்ள 7 உர மூட்டைகளை செயலாளர் விஜயகுமார் வீட்டில் இருந்து கைப்பற்றினர். மேலும், தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விதைக்கிடங்கில் எவ்வித கணக்கிலும் வராத 50 கிலோ அளவுள்ள யூரியா மூட்டைகள் 26 இருப்பது ஆய்வில் கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள 55 ஆயிரம் எக்டேர் நெல் பயிருக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் உரங்களை பதுக்குவோர் மற்றும் கூடுதல் விலையில் விற்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் முறையாக வழங்குவதை வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்யவும், விவசாயிகளுக்கு வழங்க தேவையான 4 ஆயிரம் மெ.டன் யூரியா உரத்தினை விரைவில் பெற்று விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரம் தொடர்பான புகார்களுக்கு சிவகங்கை 94420 75075, காளையார்கோவில் 74648 27909, மானாமதுரை 79046 74303, திருப்புவனம் 86102 54453, இளையான்குடி 85087 06162, தேவகோட்டை 98945 71244, கண்ணங்குடி 99942 04904, சாக்கோட்டை 94429 68758, கல்லல் 94885 08945, திருப்பத்தூர் 90879 01964, சிங்கம்புணரி 80981 53742, எஸ்.புதூர் 85266 18684 ஆகிய செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு