×

திருப்பரங்குன்றம் பகுதியில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடல்

திருப்பரங்குன்றம், நவ. 6: தினகரன் செய்தி எதிரொலியால், திருப்பரங்குன்றம் பகுதியில், பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூரக்குளம், வேடர்புளியங்குளம், விளாச்சேரி, திருநகர், மகாலட்சுமி காலனி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் இருந்தன. இது குறித்து நமது தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ஆர்.டி.ஓ முருகேசன் உத்தரவின் பேரில், வேடர்புளியஙகுளத்தில் பயனற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு முடப்பட்டது. இதேபோல, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் உத்தரவின் பேரில், எம்.எல்.ஏ அலுவலகத்தை சேர்ந்தவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சூரக்குளம், விளாச்சேரி, விரகனூர் ஆகிய இடங்களில் பயனற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடினர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Closure ,bore wells ,area ,Thiruparankundram ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...