×

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.6: அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ‘14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலம் கடத்தாமல் உடனடியாக துவக்க வேண்டும். எலக்ட்ரிக் பஸ் தனியார் மயம் கூடாது. நிலுவை டிஏ அரியர்ஸ் உடனடியாக வழங்க வேண்டும். பல ஆண்டாக வழங்காத தையற்கூலியை வழங்க வேண்டும். இ.எல் சரண்டரை வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகத்தில் வரவுக்கும்-செலவுக்கும் உள்ள தொகையை அரசே ஏற்க வேண்டும். ஏசி பஸ் வாங்குவதை விடுத்து ஒழுகும் பஸ்களை சீரமைக்க வேண்டும். கடந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் பணம் ரூ.7,000 கோடி கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags : State transport workers ,
× RELATED கொரோனா வைரஸ் எதிரொலியால் அரசு...