×

குவைத்தில் இறந்த ெதாழிலாளியின் உடலை பெற்று தரக்கோரி மனு

திருவாரூர், நவ. 6: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குவைத் நாட்டில் இறந்தது தொடர்பாக அவரது உடலை பெற்று தருமாறு மனைவி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா அத்தி சோழமங்கலம் மலையூர் பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் (40 )கூலித் தொழிலாளியான இவர் கடந்த செப்டம்பர் மாதம் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சங்கர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்த சங்கரின் உடலையும் அவருக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் பெற்று தருமாறு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சங்கரின் மனைவி மற்றும் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

Tags : Kuwait ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...