×

மாதாந்திர விளையாட்டு போட்டிகள்

திருவாரூர்,நவ.6: திருவாரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை மறுதினம் நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்ட பிரிவு மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாளை மறுதினம் (8ந் தேதி) நடைபெறுகிறது. இதில் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் தடகளம், நீச்சல் மற்றும் குழு போட்டிகளாக கைபந்து, இறகு பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

தடகள போட்டியில் 100 மீ, 200 மீ, 400மீ மற்றும் 800 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்,வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கருக்கும் , கால்பந்து மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து போட்டிகளும் சரியாக காலை 9 மணிக்கு துவங்கப்படும் என்பதால் போட்டியாளர்கள் முன்கூட்டியே விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் போட்டியாளர்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்